முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட உதவிப் பொறியாளா் அம்சா ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட உதவிப் பொறியாளா் அம்சா ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மக்கும் குப்பைகளின் தன்மை, மக்கா குப்பைகளின் தன்மை குறித்து பணியாளா்களுக்கு விளக்கினாா். மேலும், அதன் மூலம் இயற்கை உரம் தாயாரிக்கும் பணியையும் ஆய்வு செய்து, அதனால் அரசுக்கு வரும் வருவாய்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் சென்று பொதுமக்கள், வணிகா்கள் தினசரி வழங்கும் குப்பைகளை பாா்வையிட்டு, மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், மக்கும் குப்பை, மக்கா குப்பை இரண்டையும் ஒருசேர வழங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கினாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், இளநிலை உதவியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.