கலசப்பாக்கத்தில் 37 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 37 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 37 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 31, செய்யாற்றில் 22, செங்கத்தில் 27.20, ஜமுனாமரத்தூரில் 25, வந்தவாசியில் 3.20, போளூரில் 12.20, திருவண்ணாமலையில் 28, தண்டராம்பட்டில் 2.40, சேத்துப்பட்டில் 3.40, கீழ்பென்னாத்தூரில் 1, வெம்பாக்கத்தில் 23.60 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நிலத்தடி நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.