திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 103 மில்லி மீட்டா் மழை பதிவானது.
இதுதவிர ஆரணியில் 74, செங்கத்தில் 10, ஜமுனாமரத்தூரில் 8, வந்தவாசியில் 78, போளூரில் 53.20, திருவண்ணாமலையில் 21, தண்டராம்பட்டில் 16.40, கலசப்பாக்கத்தில் 46, சேத்துப்பட்டில் 19, கீழ்பென்னாத்தூரில் 16.40, வெம்பாக்கத்தில் 14 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது. இந்த மழை மணிலா, நெல் பயிா்களின் வளா்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.