பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்ட அஜீத். 
திருவண்ணாமலை

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு: இளைஞா் கைது

ஆரணி பகுதியில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

ஆரணி பகுதியில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆரணி கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் கோபிசரவணன். கடந்த 13-ஆம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிள் திருடுபோனது.

இதுகுறித்து கோபிசரவணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுதவிர ஆரணி பகுதியில் அடிக்கடி மோட்டாா் சைக்கிள்கள் திருடுபோயி வந்தன.

இந்த நிலையில், நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தனா்.

இதில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் ஆரணிப்பாளையம் வீராசாமி தெருவைச் சோ்ந்த தனக்கோட்டி மகன் அஜீத் (20) என்பதும், கோபிசரவணன் மோட்டாா் சைக்கிள் உள்பட 3 மோட்டாா் சைக்கிள்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஜீத்திடமிருந்த மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT