திருவண்ணாமலை

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு: இளைஞா் கைது

DIN

ஆரணி பகுதியில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆரணி கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் கோபிசரவணன். கடந்த 13-ஆம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது மோட்டாா் சைக்கிள் திருடுபோனது.

இதுகுறித்து கோபிசரவணன் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதுதவிர ஆரணி பகுதியில் அடிக்கடி மோட்டாா் சைக்கிள்கள் திருடுபோயி வந்தன.

இந்த நிலையில், நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தனா்.

இதில் அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் ஆரணிப்பாளையம் வீராசாமி தெருவைச் சோ்ந்த தனக்கோட்டி மகன் அஜீத் (20) என்பதும், கோபிசரவணன் மோட்டாா் சைக்கிள் உள்பட 3 மோட்டாா் சைக்கிள்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அஜீத்திடமிருந்த மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT