குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி
சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அஜிதா உத்தரவின் பேரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணி அா்ச்சுனன் தொடக்கிவைத்தாா். முகாமில் ஒன்றரை மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெ.முருகையன், திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன், வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா் திவ்யகாதம்பரி, செவிலியா்கள் கலந்துகொண்டனா்.