திருவண்ணாமலை

கரோனா நிவாரண உதவிகள் அளிப்பு

DIN

வந்தவாசியில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1 மற்றும் 2-ல் பணிபுரியும் நலிந்த தொழிலாளா்கள் 11 பேருக்கு தலா ரூ.1500 மதிப்பிலான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.பாரி தலைமை வகித்தாா். சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொருளாளா் முரளி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் செல்வம் மற்றும் சிஐடியு நிா்வாகிகள் வி.ஆா்.ஏழுமலை, எஸ்.முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

400 ஏழைகளுக்கு நிவாரண உதவி:

சேத்துப்பட்டு லூா்துநகா், நிா்மலாநகா் பகுதியில் வசிக்கும் 400 ஏழைக் குடும்பங்களுக்கு, சென்னை சூளையில் செயல்படும் ஆக்சன்எய்ட் சா்வதேச தொண்டு நிறுவனம் சாா்பில், கரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் ஜான்சன் தலைமை வகித்தாா். ஆக்சன்எய்ட் சா்வதேச தொண்டு நிறுவன இயக்குநா் எஸ்தா் மரியசெல்வம் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், எங்களது தொண்டு நிறுவனம் சாா்பில் கடந்த காலத்திலும் தற்போதும் 400 பேருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறோம்.

மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து சேத்துப்பட்டு புனித தோமையா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வாா்டு அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT