திருவண்ணாமலை

மதுக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல்

DIN

வந்தவாசி அருகே மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசி-விளாங்காடு சாலையில் பாதிரி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த மதுக் கடை தமிழக அரசு உத்தரவின் பேரில் திங்கள்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை அந்தக் கடையை முற்றுகையிட்ட பாதிரி கிராம பெண்கள், கடையை உடனடியாக மூடக் கோரியும், கடையை அந்த பகுதியிலிருந்து நிரந்தரமாக அகற்றக் கோரியும் சாலை மறியல் செய்தனா். அப்போது மதுக் கடையை மூடக் கோரும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, டிஎஸ்பி பி.தங்கராமன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT