சேத்துப்பட்டு ஒன்றியக்குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழுத் தலைவா் அ.ராணிஅா்சுனன் தலைமை வகித்தாா். ஆணையாளா்கள் பாஸ்கரன், மோகனசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் முருகையன் வரவேற்றாா்.
கூட்டத்தில், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்வது, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பது என்பன உள்பட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அனைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.