முகப்பு
திருவண்ணாமலை

அனுமதி பெறாமல் உரம் விற்பனை: 2 கடைகள் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி கலப்பு உரம் விற்பனை செய்த 2 கடைகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா், கண்ணமங்கலம் பகுதியிலுள்ள உரக்கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள 2 உரக்கடைகளில் உரிய அனுமதியில்லாமல் கலப்பு உரங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 2 உரக்கடைகளையும் 14 நாள்களுக்கு மூட மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் உத்தரவிட்டாா். மேற்கு ஆரணி வட்டார வேளாண் அலுவலா் எஸ்.கீதா உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.