முகப்பு
திருவண்ணாமலை

மதங்கள் தடையல்ல: கரோனாவால் உயிரிழந்த 121 பேரின் உடல்களை அடக்கம் செய்த தமுமுக இளைஞர்கள்

கரோனா பாதித்து உயிரிழந்த இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என மும்மதத்தைச் சேர்ந்த  121 பேரின் உடல்களை தமுமுக இளைஞர்கள் அடக்கம் செய்து பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

Updated On : 28 ஜூன், 2021 at 4:29 PM
செய்யாறை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தி்ல் கரோனாவினால் இறந்த பெண்ணின் உடலை திங்கள்கிழமை அடக்கம் செய்த தமுமுக இளைஞர்கள்.
பகிர்:

கரோனா பாதித்து உயிரிழந்த இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என மும்மதத்தைச் சேர்ந்த  121 பேரின் உடல்களை தமுமுக இளைஞர்கள் அடக்கம் செய்து பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

2019 -ம் ஆண்டு முடிவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்றினால், இந்திய உள்பட அனைத்து நாடுகளில் இலட்சக்கணக்கோனார் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். கரோனாவின் அளவை மருத்துவத்துறையும் கணக்கிடப்படாமலும், மத்திய மாநில அரசுகள் பல கோடிகளை செலவழித்துயும், இன்னும் செலவழித்துக் கொண்டேத் தான் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் மருத்துவத்துறையும், அரசு நிர்வாகமும் திக்கு முக்காடிக் கொண்டு இருக்கிறது. 

கரோனா வைரஸ் தொற்றினால் குக்கிராமம் முதல் பெருநகரங்களில் வசித்து வரும் பெரும்பாலானோர் பாதிப்பு அடைந்து இறந்து வருகின்றனர். இவ்வாறு கரோனாவினால் இறந்தவர்களின்  உடலை அடக்கம் செய்திட சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதேசமயம், கரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன் வருவதில்லை. அதுவும் கிராமப்புறங்களில் கரோனாவினால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய  உறவினர்களோ, கிராம மக்களே முன் வராமல் ஒதுக்கி நிற்கின்றனர். குடும்பத்தினருக்கு தெய்வமாக விளங்கிய தாய், தந்தையரில் எவரும் இறந்ததால் கடைசிக் காலத்தில் அவர்களது உடலை நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் குடும்பத்தினர் தவியாய் தவித்து வந்தனர்.

Advertisement

இறந்தவர்களின் பலரது உடலை அடக்கம் செய்யமுடியாமல் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பொது மக்கள் தவியாய் தவித்து வருவதை அறிந்த, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர் குழவினர் தாமாகவே முன் பந்து கரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம்  என மும்மதத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை அவரவரது மத, இன, குல வழக்கப்படி அரசு விதிகளுக்குட்பட்டு வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உடலை அடக்கம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு  வருகின்றனர்.
 
இதுப் போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஆரணி, சேத்துபட்டு, வந்தவாசி, ஆரணி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட  பகுதிகளில்  37 வயது முதல் 83 வயதுடையவர்களில் கரோனாவினால் இறந்த ஆண்கள் 82 பேரும், பெண்கள் 39 பேருமாக மொத்தம் 121 பேரின் உடல்களை இதுவரையில் (ஜூன்.28) அடக்கம் செய்து உள்ளனர். இவர்களில் இந்து மதத்தினர்  56 பேரும், முஸ்லீம் மதத்தினர் 54 பேரும், கிறிஸ்துவர்  11 பேர்  என அடங்குவர். கரோனாவினால் இறந்தவர்களின் உடலை தொடர்ந்து அடக்கம் செய்து வரும் தமுமுக இளைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மற்றவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கரோனாவினால் இறந்தவர்களின்  உடலை தகனம் செய்யும் சேவைப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

உடலை தகனம் செய்யும் சேவைப் பணியினால் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.