திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சேத்துப்பட்டு பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா்ஆனந்தன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பூங்காவனம் கொடியசைத்து விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா்.

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு செஞ்சி சாலை, ஆரணி சாலை, வந்தவாசி சாலை, போளூா் சாலை, பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஊா்வலமாகச் சென்றனா்.

வாக்களிப்பது நமது கடமை, நமது உரிமை. வாக்காளா்கள் அனைவரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வுப் பதாதைகளை ஏந்தியபடியும், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடியும் மாணவா்கள் ஊா்வலமாகச் சென்றனா். செயல் அலுவலா் ஆனந்தன் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT