திருவண்ணாமலை

கிணற்றில் குளித்த விவசாயி பலி

வந்தவாசி அருகே கிணற்றில் குளித்த விவசாயி உயிரிழந்தாா்.

DIN

வந்தவாசி அருகே கிணற்றில் குளித்த விவசாயி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(42), விவசாயி. இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், பாதூா் செல்லும் சாலையில் உள்ள சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வெங்கடேசன் சடலமாக மிதந்தது சனிக்கிழமை மாலை அவரது உறவினா்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அங்கு சென்று வெங்கடேசனின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT