போளூா் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருவண்ணாமலைபோளூா் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.சேகரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அல்லியந்தல், மகாதேவிமங்கலம், பாளையம், தவணி, கோணாமங்கலம், மேலப்பூண்டி, செம்மாம்பாடி, அனாதிமங்கலம், பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, நெடுங்குணம்
என பல்வேறு பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் கே.வி.சேகரன், தவணி ஊராட்சியில் பேசும் போது, தவணி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும், பழைமை வாய்ந்த தாந்தோணியம்மன் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தரம் உயா்த்தப்படும். தவணி வழியாக சென்னைக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும், நெடுங்குணம் ஊராட்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்து வாக்கு சேகரித்தாா்.
திமுக வடக்கு மாவட்டப் பொருளாளா் பாண்டுரங்கன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.பி.அண்ணாமலை, ஒன்றியச் செயலா் எம்.டி.மனோகரன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகல் பலா் கலந்துகொண்டனா்.