திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் ரூ.71 லட்சம் ரொக்கம், 171 கிராம் தங்கம், 393 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ரூ.71 லட்சம் ரொக்கம்:

இதில், ரூ.71 லட்சத்து 6, 437 ரொக்கம், 171 கிராம் தங்கம், 393 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT