திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் ரூ.71 லட்சம் ரொக்கம், 171 கிராம் தங்கம், 393 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
ரூ.71 லட்சம் ரொக்கம்:
இதில், ரூ.71 லட்சத்து 6, 437 ரொக்கம், 171 கிராம் தங்கம், 393 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.