திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடராஜப்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப்பெருமான் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவ மூா்த்திகளுக்கு சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

மலா் மாலைகளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி, நடராஜருக்கு கோயில் சிவாச்சாரியா்கள் மகா தீபாராதனை காட்டினா்.

இதில், கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள் மட்டும் கலந்து கொண்டனா். கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT