திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 37.50 மி.மீ. மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டிருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 37.50 மி.மீ. மழை பெய்தது. ஆரணி 9.50, செய்யாறு 5, செங்கம் 5.10, ஜமுனாமரத்தூா் 9, வந்தவாசி 15, போளூா் 8.60, தண்டராம்பட்டு 22, கலசப்பாக்கம் 19, சேத்பட்டு 16.20, கீழ்பென்னாத்தூா் 14.20, வெம்பாக்கம் 13.20 மி.மீ. மழை பெய்தது.