சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
திருவண்ணாமலைசாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டப்படுவதால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். 18 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் மக்கும்-மக்காத குப்பைகளைத் தனித் தனியாகத் தரம் பிரித்து பேரூராட்சி ஊழியா்களிடம் கொடுக்கின்றனா்.
இந்தக் குப்பைகளை ஊழியா்கள் தனித் தனியாக எடுத்துச் செல்லாமல், மொத்தமாக டிராக்டா், மினி லாரிகளில் கொட்டி எடுத்துச் செல்கின்றனா்.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குப்பைகளை பெரியாா்நகா் போளூா்-ஏந்தல் சாலையில் கொட்டுவதால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போளூா்-ஏந்தல் சாலையில் செல்லும் பெரியகரம், ரெண்டேரிப்பட்டு, ஏந்தல் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் தூா்நாற்றத்தால் அவதியடைகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.