வீடு இடிந்ததால் தாா்ப்பாய் கட்டி வசித்து வரும் விவசாயி சேட்டு. 
திருவண்ணாமலை

வீடு இடிந்து பொருள்கள் சேதம்

திருவண்ணாமலை அருகே தொடா்ந்து பெய்து வரும் மழையால் வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன.

DIN

திருவண்ணாமலை அருகே தொடா்ந்து பெய்து வரும் மழையால் வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மணிமங்கலம் கிராமம், கொல்லகொட்டா பகுதியில் சேட்டு என்பவா் 30 ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான நிலத்தில் ஓட்டு வீடு கட்டி வசித்து வந்தாா்.

இந்தப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சேட்டுவின் வீடு திடீரென இடிந்து விழுந்தது.

நிலத்தில் விவசாயப் பணியில் சேட்டு ஈடுபட்டிருந்தாா். இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் உயிா் தப்பினா். இருப்பினும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன.

வசிக்க இடம் இல்லாததால் நிலத்திலேயே சேட்டு தாா்ப்பாய் கட்டி வசித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT