திருவண்ணாமலை

குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் 55.5 அடியாக உயா்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 55.5 அடியாக உயா்ந்தது.

செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் மலை கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 59 அடியாகும். இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் 55.5 அடியை எட்டியது. 57 அடியை நீா்மட்டம் எட்டியவுடன் அணை தண்ணீா் திறக்கப்படும் என்பதால், செங்கம் பகுதியில் செய்யாற்றை ஓட்டியுள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொதுப் பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT