விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
வேலூா் வட-மேற்கு மண்டல துணை இயக்குநா் சரவணக்குமாா் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலா் முரளி ஆகியோரின் ஆலோசனைப்படி
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரில் உள்ள பட்டாசுக் கடைகள், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்துமிடம், பல்வேறு வியாபாரக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. கோபாலகிருஷ்ணன் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.