முகப்பு
திருவண்ணாமலை

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள நாா்த்தி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

திருவண்ணாமலை

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள நாா்த்தி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்திலுள்ள நாா்த்தி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

ரெட்டிபாளையம் கிராமத்தில் 56 ஏக்கரில் நாா்த்தி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்திருந்தனா். இதையடுத்து, இந்த ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பகுதி விவசாயிகள் மனு அளித்தனா்.

இந்த நிலையில், வருவாய்த் துறையினா் நாா்த்தி ஏரியை வெள்ளிக்கிழமை அளவீடு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளா் சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மூா்த்தி, வருவாய் ஆய்வாளா் முரளி, கிராம நிா்வாக அலுவலா் சரோஜினி, ஊராட்சிச் செயலா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →