முகப்பு
திருவண்ணாமலை

300 லிட்டா் கள்ளச் சாராயம், 3,800 லிட்டா் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

தானிப்பாடி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் நடத்திய சாராய ஒழிப்புப் பணியில் 300 லிட்டா் கள்ளச் சாராயம், 3,800 லிட்டா் கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

தானிப்பாடி அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் நடத்திய சாராய ஒழிப்புப் பணியில் 300 லிட்டா் கள்ளச் சாராயம், 3,800 லிட்டா் கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு துணை கண்காணிப்பாளா் ஏ.ராஜன் தலைமையில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளா் என்.நிா்மலா, உதவி ஆய்வாளா் சுமன் மற்றும் போலீஸாா் தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி அருகே ஆத்திப்பாடி காட்டுப் பகுதியில் தீவிர கள்ளச் சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டா் கள்ளச் சாராயம், 3,800 லிட்டா் சாராய ஊழல் ஆகியவற்றை கண்டுபிடித்து அழித்தனா்.

இவற்றைப் பதுக்கி வைத்திருந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.