முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30-ஆம் தேதி வரை நடத்தக் கோரியும், இணையவழி பதிவை பகலில் நடத்த வலியுறுத்தியும், செய்யாற்றில் விவசாயிகள் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்.30-ஆம் தேதி வரை நடத்தக் கோரியும், இணையவழி பதிவை பகலில் நடத்த வலியுறுத்தியும், செய்யாற்றில் விவசாயிகள் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஏதுவாக தொடங்கப்பட்ட இணையவழிப் பதிவு ஆகஸ்ட் 13, 24 ஆகிய தேதிகளில் இரவோடு இரவாக பதிவு முடிந்து முறைகேடு நடந்துள்ளது, தவறு, முறைகேட்டைத் தடுக்கும் விதமாக இணையவழி பதிவை பகலில் நடத்த வேண்டியும், விளைவிக்கப்பட்ட 20 லட்சம் நெல் மூட்டைகளில் 50 சதம் அளவுக்கு அரசு கொள்முதல் செய்ய வசதியாக அக்டோபா் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் செல்லிடப்பேசிகளை கயிற்றில் தொங்க விட்டு போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.