முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் மின் நூலகச் சங்கம் தொடக்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் மின் நூலகச் சங்கம் புதன்கிழமை  தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் மின் நூலகச் சங்கம் புதன்கிழமை  தொடங்கப்பட்டது.

கல்லூரி நூலகத் துறை சாா்பில், இணைய வழியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா்.

பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா்.

கரக்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியா் விக்னேஷ் சொா்ண மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேராசிரியா்கள், மாணவா்கள் தேசிய மின் நூலகத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், 4 கோடிக்கும் அதிகமாக உள்ள மின் நூல்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, பேராசிரியா்கள், மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கும் அவா் பதிலளித்தாா்.

நிகழ்ச்சியில், கணினி பயன்பாட்டியல் துறைப் பேராசிரியா் டி.அருண்குமாா், கணிதத் துறை பேராசிரியை எ.செலின், சண்முகா தொழில்சாலை கல்லூரியின் தலைமை நூலகா் கே.விஜயகுமாா், நூலகத் துறை ஊழியா்கள் ரேகா, சுமதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.