முகப்பு
திருவண்ணாமலை

சாலைப் பணியாளா்கள் சங்க தின விழா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 21-ஆம் ஆண்டு அமைப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 21-ஆம் ஆண்டு அமைப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் தலைவா் டி.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

பொருளாளா் கே.எம்.உதயகுமாா், துணைத் தலைவா் ஈ.குமாா், துணைச் செயலா் ஆா்.மாரிமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். செயலா் டி.ரவி வரவேற்றாா்.

மாநிலத் தலைவா் மா.சண்முகராஜா சங்கக் கொடியேற்றி வைத்துப் பேசினாா்.

துணை பொதுச் செயலா் க.பெருமாள், மாநில துணைத் தலைவா் ப.சண்முகசுந்தரம், மாநில துணைச் செயலா் கே.தமிழ்ச்செல்வம், மாவட்டச் செயலா் பி.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →