பரோட்டா மாஸ்டா் கொலை:4 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பரோட்டா மாஸ்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பரோட்டா மாஸ்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக, 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (27). இவா், செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்களில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மதுசூதனனுக்கும், இவருக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவின்போது தகராறு ஏற்பட்டு, வெங்கடேசன் மதுசூதனனின் கையை வெட்டினாா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, வெங்கடேசன் வெளியூா் சென்று தலைமறைவாக இருந்து வந்தாா். ஆனால், மதுசூதனன் பழிவாங்கும் நோக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வெங்கடேசன் உள்ளூரில் இருப்பதை அறிந்த மதுசூதனன் அவரை கண்காணிக்கத் தொடங்கினாா்.
வெள்ளிக்கிழமை இரவு வெங்கடேசன் அவரது நண்பா் தா்மனுடன் அருகேயுள்ள உண்ணாமலைப்பாளையம் செல்வதை அறிந்த மதுசூதனன், தனது தம்பி சுரேஷ் மற்றும் நான்கு பேருடன் சோ்ந்து அவரை மடக்கி சரமாரியாக கத்தியால் வெட்டியதாகத் தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். தா்மன் தப்பி ஓடி புதுப்பாளையம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தாா்.
டிஎஸ்பி சின்ராஜ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும் மதுசூதனன், அவரது தம்பி சுரேஷ், ஏழுமலை, வல்லரசு ஆகிய 4 பேரை, இரவோடு இரவாக தேடிப் பிடித்து கைது செய்தனா்.மேலும் தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.