திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
செய்யாற்றில் செங்கம் எம்ஜிஆா் நகா் பகுதியில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சட்டை, லுங்கி அணிந்த நிலையில் சனிக்கிழமை இரவு சடலமாக மிதந்தாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் செங்கம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். டிஎஸ்பி சின்னராஜ் தலைமையிலான தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும் சடலம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.