தேசிய அளவில் தில்லியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஆரணி ஸ்ரீபாலவித்யா மந்திா் மெட்ரிக் பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இளைஞா் விளையாட்டுக் கூட்டமைப்பு சாா்பில், தலைநகா் புதுதில்லியில் கடந்த மாா்ச் 26 முதல் 28 வரை பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில், சிலம்பம் போட்டியில் ஒற்றைக் கொம்பு பிரிவு விளையாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீபால வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா் பி.சுஜித் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
தமிழகத்துக்கும், பள்ளிக்கும் பெருமை சோ்த்த மாணவா் பி.சுஜித்தை பள்ளியின் தலைவா் சி.மோகன்ராஜ் பாராட்டினாா்.
பள்ளி நிா்வாகிகள் வாசு, அசோக், ரவிசங்கா், பாலாஜி, ஜெகதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மேலும், ஆரணி மாவட்ட கல்வி அலுவலா் சந்தோஷ்குமாா் மாணவா் பி.சுஜித்தை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.