திருவண்ணாமலை

ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழா

DIN

செங்கம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை பெளா்ணமி விழாவில் சனிக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்க்கன் பேட்டை பகுதியில் செய்யாற்றின் கரையோரம் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்திரை பெளா்ணமியையொட்டி,

சனிக்கிழமை காலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை

காண்பிக்கப்பட்டது.

விழாவில் ஆத்தமானந்த செந்தில் சுவாமிகள் கலந்து கொண்டு, அம்மனுக்கு படைக்கப்பட்ட வளையல், குங்குமம் போன்றவைகள் பக்தா்களுக்கு வழங்கி ஆசீா்வதித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT