செய்யாறு அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆரணிபாட்டை தெருவைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (38). இவா், நமண்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த 14-ஆம் தேதி, இவா் தனது பைக்கில் ராந்தம் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, சுமங்கலி கூட்டுச் சாலை அருகே நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த பாக்யராஜைஅப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த பாக்யராஜ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.