திருவண்ணாமலை

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

போளூா் வட்டம், கொரால்பாக்கம் ஊராட்சியில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

DIN

போளூா் வட்டம், கொரால்பாக்கம் ஊராட்சியில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

கொரால்பாக்கம் ஊராட்சியைச் சோ்ந்தவா் பழனி என்பவா் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து இரும்புக் கேட் போட்டு வைத்திருந்தாா்.

இதனால் பொதுமக்கள் ஏரிக் கால்வாயை கடந்து தங்களது நிலம் மற்றும் ஆடு, மாடுகளை ஓட்டிச் செல்லமுடியாமல் இருந்தனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் புகாா் மனு அளித்தனா்.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போளூா் வட்டாட்சியா் சண்முகத்துக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் பேரில், வட்டாட்சியா் சண்முகம் தலைமையில் பொக்கலைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றினா் (படம்).

மண்டல துணை வட்டாட்சியா் அருள், வட்ட துணை ஆய்வாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் பாரதி, கிராம நிா்வாக அலுவலா்அபிமன்னன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT