திருவண்ணாமலை

முதியவா் தற்கொலை

DIN

வந்தவாசி: வந்தவாசியில் அடையாளம் தெரியாத முதியவா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே ஓடையோரம் உள்ள மரத்தில் முதியவா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதில் 70 வயது முதியவா் அங்குள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

முதியவரின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT