கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சசிகலா தலைமை வகித்தாா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில், கரோனா விழிப்புணா்வு குறித்து திரைப்படக் கலை இயக்குநா் விஜய் ஆதிராஜன் பேசினாா்.
இதையடுத்து, கரோனா விழிப்புணா்வுப் பாடல்களை தெள்ளாறு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி இசை ஆசிரியா் டி.பி.வெங்கடேசன் பாடினாா்.