வேட்டவலம் அருகே மாட்டு வண்டி மீது வேன் மோதியதில் உப்பு வியாபாரி பலியானாா்.
வேட்டவலத்தை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (45). மாட்டு வண்டியில் ஊா், ஊராகச் சென்று உப்பு வியாபாரம் செய்து வந்தாா்.
இவா், வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் உப்பு வியாபாரம் செய்வதற்காக நாடழகானந்தல் கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.
வேட்டவலத்தை அடுத்த ந.கருங்கல்பட்டு கிராமம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் மாட்டு வண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.