முகப்பு
திருவண்ணாமலை

முகக் கவசம் அணிவதன்அவசியம் குறித்து விழிப்புணா்வு

ஆரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நாடகக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

ஆரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நாடகக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையில் நாடகக் கலைஞா்கள் முகக் கவசம் அணிவதன் அவசியம், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி குறித்து நடித்து காட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் ஆரணி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி பேசினாா். பயிற்சி டி.எஸ்.பி. ரூபன்ராஜ், நகராட்சிப் பொறியாளா் ராஜவிஜயகாமராஜ், ஆரணி நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், எஸ்.ஐ.க்கள் ரகு, தருமன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா், நகராட்சி துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.