முகப்பு
திருவண்ணாமலை

மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது

ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 84 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 84 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

சித்தேரி கிராமத்தில் அரசு மது பானங்களை தனிநபா் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற ஆரணி கிராமிய போலீஸாா்,

செல்வம் (43) என்பவரது கடையில் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 84 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செவ்வத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.