முகப்பு
திருவண்ணாமலை

அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொழாவூா் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிமென்ட் காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை

அபாய நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொழாவூா் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிமென்ட் காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கொழாவூா் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சிமென்ட் காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கொழாவூா் ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், 5-க்கும் மேற்பட்ட சிறு குடிநீா்த் தொட்டிகள் உள்ளன.

அங்கன்வாடி மையம் அருகேயுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் அருகே நியாய விலைக் கடை, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.

கடந்த 2012-2013ஆம் ஆண்டில் ரூ.80,300-இல் இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன.

நீா்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி, தூண் ஆகிய பகுதிகளில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்து வருகின்றன. மேலும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, விபத்து ஏற்படும் முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியம்மாளிடம் கேட்டபோது, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் நிலை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய தொட்டி அமைக்கவுள்ளோம். மேலும், ஒன்றிய நிதியை

எதிா்பாா்த்துள்ளோம் எனத் தெரிவித்ததாகக் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →