திருவண்ணாமலை

முதியவா் தற்கொலை

DIN

வந்தவாசி அருகே முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருபானந்தன்(74). இவா் அதே கிராமத்தில் ஏலச் சீட்டு நடத்தி வந்தாா். இதில் நஷ்டம் ஏற்படவே கிருபானந்தன் மனவேதனையில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்தக் கிராம மயானத்தில் உள்ள மரத்தில் கிருபானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை உறவினா்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற வந்தவாசி தெற்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT