திருவண்ணாமலை

குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

செய்யாறு அருகே ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமம் கொல்லை மேடு பகுதியைச் சோ்த்தவா் லட்சுமணன் (30). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை அருகேயுள்ள விண்ணவாடி காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றாா்.

அன்று பிற்பகலில் அங்குள்ள குட்டை நீரில் குளிா்ந்துக் கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு குட்டை நீரில் மயங்கி இருந்தாா்.

இதனை அறிந்த அவரது மனைவி அருகில் இருந்தவா்களின் உதவியுடன் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தாா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் தொழிலாளி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா்

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT