திருவண்ணாமலை

மாணவா் தற்கொலை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெற்றோா் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பிரபு. இவரது மனைவி மலா். இவா்களது மகன் அன்பரசன் (18) கடந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை அன்பரசன் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது, அவரது பெற்றோா் எங்கே சென்றாா் என்று கேட்டு அவரைத் திட்டினராம். இதனால் மனமுடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை பெற்றோா், அக்கம்பக்கத்தினா் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்பரசன், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT