திருவண்ணாமலை

ஓய்வு பெறும் நாளில் பத்திரப் பதிவாளா் பணியிடை நீக்கம்

பணி ஓய்வு பெறும் நாளான சனிக்கிழமை (ஜூலை 30), செய்யாற்றில் மாவட்ட பத்திரப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

DIN

பணி ஓய்வு பெறும் நாளான சனிக்கிழமை (ஜூலை 30), செய்யாற்றில் மாவட்ட பத்திரப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாவட்டப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ், செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், தெள்ளாா் உள்ளிட்ட11 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

செய்யாற்றில் மாவட்டப் பதிவாளராக சம்பத் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா். இவரது பணிக்காலம் ஜூலை 30-ஆம் தேதியோடு நிறைவடைந்தது.

இந்த நிலையில், மாவட்டப் பதிவாளராக பணியாற்றி வந்த சம்பத் வெள்ளிக்கிழமை திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இவா், மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில் நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டை விட, குறைவான மதிப்பீட்டைக் கொண்டு பத்திரப் பதிவு செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக பல புகாா்கள் உள்ளன. மேலும், இவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையும் மேற்கொண்டனா்.

இது தொடா்பாக பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பத்தை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள பத்திரப் பதிவு ஐஜி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT