திருவண்ணாமலை

ரூ.5 லட்சம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

வந்தவாசியில் கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 டன் நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி காந்தி சாலையில் உள்ள கௌதம் என்பவரின் கடையிலும், பெட்டிநாயுடு தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் வீட்டிலும் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையிலான அதிகாரிகள் இரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், இரு இடங்களிலும் மொத்தம் 4 டன் எடையுள்ள நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT