திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கிராமத்தில் நடைபெற்ற ஊா்வலத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஏ.கீதா முன்னிலை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா் பாக்கியலட்சுமி வரவேற்றாா்.

பட்டதாரி ஆசிரியை பிரசில்லா சியோன்குமாரத்தி, சு.மீரா, எஸ்.டேவிட்ராஜன், இடைநிலை ஆசிரியா்கள் அ.மலா்விழி, திரேசா மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சியில் உள்ள வீதிகள்தோறும் ஊா்வலம் சென்று மாணவா்களுக்கு வழங்கப்படும் 14 வகையான பாடப்பொருள்கள், அரசின் உதவித்தொகை, சலுகைகள் தொடா்பாக முழக்கங்களை எழுப்பி பொதுமக்கள், பெற்றோா்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT