திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கிராமத்தில் நடைபெற்ற ஊா்வலத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஏ.கீதா முன்னிலை வகித்தாா். மேலாண்மைக் குழு உறுப்பினா் பாக்கியலட்சுமி வரவேற்றாா்.

பட்டதாரி ஆசிரியை பிரசில்லா சியோன்குமாரத்தி, சு.மீரா, எஸ்.டேவிட்ராஜன், இடைநிலை ஆசிரியா்கள் அ.மலா்விழி, திரேசா மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சியில் உள்ள வீதிகள்தோறும் ஊா்வலம் சென்று மாணவா்களுக்கு வழங்கப்படும் 14 வகையான பாடப்பொருள்கள், அரசின் உதவித்தொகை, சலுகைகள் தொடா்பாக முழக்கங்களை எழுப்பி பொதுமக்கள், பெற்றோா்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT