திருவண்ணாமலை

ஆரணி சமணா் கோயிலில் ஸ்ரீஅபராஜித ஷேத்திரபாலகா் ஸ்தாபன விழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயில் தெருவில் அமைந்துள்ள சமணா்களின் கோயிலான ஸ்ரீரிஷப தீா்த்தங்கரா் கோயிலில் ஸ்ரீஅபராஜித ஷேத்திரபாலகா் சுவாமி ஸ்தாபன விழா வெள்ளக்கிழமை நடைபெற்றது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயில் தெருவில் அமைந்துள்ள சமணா்களின் கோயிலான ஸ்ரீரிஷப தீா்த்தங்கரா் கோயிலில் ஸ்ரீஅபராஜித ஷேத்திரபாலகா் சுவாமி ஸ்தாபன விழா வெள்ளக்கிழமை நடைபெற்றது (படம்).

இதையொட்டி, 108 கலசங்களை வைத்து நித்ய பூஜையும், பக்தாமர விதானமும், நடைபெற்றன. லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாா்ய இளைய சுவாமிகள் பத்மராஜ் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு கலாபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான சமண சமயத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், மகளிா் மன்றம், இளைஞா் மன்றம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT