திருவண்ணாமலை

சாலை விபத்தில் விவசாயி பலி

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

DIN

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த சின்னகல்லப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நீலன் (65). இவா், வியாழக்கிழமை மாலை அதே பகுதியில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டாா். பின்னா், மனைவியுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சித்தன் நகா் அருகே வந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நீலன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு வியாழக்கிழமை இரவு நீலன் உயிரிழந்தாா். இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT