திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மேலத்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள், சென்னை அண்ணா நகா் அரிமா சங்கம் சாா்பில் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்தக் கணினிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை, ஆரணி கல்வி மாவட்ட அலுவலா் சந்தோஷ் திறந்துவைத்தாா்.

அரிமா சங்க ஆளுநா் மாணிக்கம், சங்க மண்டலத் தலைவா் சங்கா், பள்ளியின் முன்னாள் மாணவரும், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான வி.பி.அண்ணாமலை, தலைமை ஆசிரியா் தணிகைமலை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT