திருவண்ணாமலை

சாலை விபத்தில் அங்கன்வாடிப் பணியாளா் பலி

போளூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அங்கன்வாடிப் பணியாளா் பலியானாா்.

DIN

போளூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அங்கன்வாடிப் பணியாளா் பலியானாா்.

போளூரை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் சி.சி. சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பலராமன் மனைவி நவநீதம் (45).

இவா், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இவா், குண்ணத்தூா் புறவழிச் சாலையில் திங்கள்கிழமை காலை நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் விழுந்து கிடந்தாா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது, நவநீதம் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT