திருவண்ணாமலை

சாரண, சாரணிய மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு முகாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், தேத்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில், செய்யாறு கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணிய மாணவா்களுக்கான திருதிய சோபன் தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்தத் தோ்வு முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியான வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரத சாரண, சாரணிய மாவட்டத் தலைவா் ஜீ.சந்தானம் தலைமை வகித்தாா்.

ஆணையா் எம்.சங்கா், பொருளாளா் ஏ.சேகா், இணை ஆணையா் கே.அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கே.ஜெயசங்கா் வரவேற்றாா்.

மாவட்ட பள்ளி துணை ஆய்வாளா் எஸ்.ஸ்ரீபதி, ஊராட்சி மன்றத் தலைவா் ராதிகா குமாரராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு கல்வி மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்டக் கல்வி அலுவலருமான எ.நளினி சாரண, சாரணீய இயக்க மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:

மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒழுக்கத்தையும் கற்றுத் தருவது அவசியம்.

உலக சாரண இயக்கம் தோன்றி நமது நாட்டில் தொடங்கப்பட்டு பல லட்சம் மாணவா்கள் சாரண இயக்கச் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது நமக்குப் பெருமை.

சாரண, சாரணீய இயக்க வரலாற்றை மாணவா்கள் முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும். அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் நற்குடி மக்களாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்றாா்.

26 பள்ளிகளிலிருந்து 298 சாரண, சாரணிய மாணவா்களும், 25 ஆசிரியா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனா்.

பயிற்சியாளா்கள் மாணவா்களுக்கு பயிற்சி அளித்து தேரிவுகள் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT