ஆரணி: ஆரணி அடுத்த சிறுமூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவீரஆஞ்சநேயா் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றதில் ஸ்ரீராமா், லட்சுமணா், சீதை, ஆஞ்சநேயா் உற்சவா் சிலைகளை மலா்களால் அலங்கரித்து தேரில் வைத்து தேரை கிராமம் முழுவதும் பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா்.
விழாவில் சிறுமூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.