திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், தலைமைக் கழகப் பேச்சாளா் பெருநற்கிள்ளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா், கண்ணமங்கலம் பேரூா் கழகச் செயலா் கே.கோவா்தனன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் விண்ணமங்கலம் ரவி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்டக் கவுன்சிலா் குமரேசன், குண்ணத்தூா் மாமது, முள்ளிப்பட்டு ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.